நவராத்ரி பாடல்கள்-௧
பல்லவி
ஒம், ஒம், ஒம்
ஓமென்ற ஓங்கார ஒசைதனில்
ஒன்றான சக்திகளின் சங்கமமே
அனு பல்லவி
நாமென்ற நமகாரம் நமைவிட்டு நீங்கிடவே
மாபெரும் சக்திதனை வணங்கி வழிபடுவோம்
சரணம்-௧
நேமியுடன் சக்கரமும் நெற்றி திலகமுமே
பூமியிலே சக்திகளின் சங்கமத்தின் பிரதிபலிப்பே
ஓமெனும் கரிய சக்தயுடன் சங்கமிக்கும்
யம்மேண்டற ஞான சக்தியும் இம்மேன்ற இச்சாசக்தியுமே
சரணம்-௨
நவநவமாய் வடிவாகும் நானாவித சக்திகளை
நாவாலும் மனதாலும் நல்லுடலாலும் பூஜிக்க
நல்லதோர் தருணமிதே நவராத்ரி நன்னாளே
நவரச நாயகியின் நல்லடி பணிவோமே
-கலாவதி ரெங்கசாமி
No comments:
Post a Comment