நவராத்ரி பாடல்கள்-௬
பல்லவி
திருவெல்லாம் நிறைந்திட்ட திருமகளே
திருமாலின் திருமார்பில் திகழ்பாவளே
அனு பல்லவி
திருவிளக்கின் ஜோதியும் நீயன்றோ - அழகுடை
பொருள்யாவும் உந்தன் வடிவன்றோ
சரணம்
பொருளோடும் புகழோடும் வாழ்ந்திடவே -உன்
திருஅருளை வேண்டுகிறோம் தினம்தினம்
ஒருகுறையின்றி யாம் வாழ்ந்திடவே-நின்
அருட்பார்வை தனைவேண்டி பாடுகிறோம்
-கலாவதி ரெங்கசாமி
No comments:
Post a Comment